Sunday, June 20, 2010

தருணம் எதுவாயினும்...

தருணம் எதுவாயினும்... மகிழ மட்டும் அறிந்திருந்தேன்..!
நீ வந்து போனாய்..! ஏதேதோ தந்துவிட்டு போனாய்..!
இப்போதெல்லாம்...
மகிழுந்தருணங்களில் வருந்துகிறேன்...!
"நீயருகில் இல்லையே" என்று...
"நீயருகில் இல்லையே" என்று...
வருந்துந் தருணங்களில் மகிழவும் செய்கிறேன்..!
என்ன மாயம் செய்தாயடி?!

No comments: