Sunday, June 12, 2011

தாளம் தப்பியும் இன்னிசை!

மழைபெய்து ஓய்ந்திருந்தது..!

மழைமெழுகி ஈரம் காயாத தரைகள்..!

அவளோடு விரல்பிடித்து நடந்திருந்தேன்.!

பெயரறியா பூச்சியொன்று கடந்தது..!

நின்றாள் அவள்..! நிதானித்து கவனித்தாள்..!

கண்டு அவளோடு.. களிநடனமாடி...

மண்ணுக்குள் மறைந்தது.. நொடிகளில்..!

யார்சொல்லிக் கொடுத்ததோ? என்றெண்ணி முடிப்பதற்குள்..

சிறுகல் எடுத்தாள்..! மண்பறித்து தேடினாள்..!

உதடுகள் பிதுக்கி.. உச்சுக்கள் கொட்டி..

மலரென மல்ர்விரல்கள் விரித்து..

தூரிகையாய் சிலமுறை சுழற்றி..

காற்றில் ஓவியம் வரைந்துகொண்டே சொன்னாள்..

 

"காணும்.. காணாப் ..போச்!"

 

தாளம் தப்பியும் இன்னிசையாய் ஒலித்ததது..!

வரையாவிடினும்.. உயிரோவியமாய் ஒளிர்ந்தது..!

மழலையே நீ வாழி..! மகளே  நீ வாழி..! எனக்கும் 

தாய்மையை உணர்வித்த மகோன்னதமே நீ வாழி!