Saturday, June 19, 2010

நினைவுகளால் அலைக்கழிக்கப்படுகிறேன்..!

நினைவுகளால் அலைக்கழிக்கப்படுகிறேன்..!
நீ செய்த குறும்புகள்..! நீ பார்த்த பார்வைகள்..!
நின் சொற்கள் - அவை தொனித்த தொனிகள்..!
கலங்கிய நெஞ்சம்... ததும்பிய கண்ணீர்..!
சில நேரம் தழுதழுத்த குரல்..
பலவிதமாய் நீ உடுத்திய உடைகள்..
பரபரப்பாய் நாம் கடத்திய பொழுதுகள்..
அத்தனையும் ஒருசேர அழகழகாய்..
சிந்தையெல்லாம் ஆக்கிரமித்த நீ..!
சிரிக்கிறேன்.. அழுகிறேன்.. சிந்திக்கிறேன்
நிச்சயமாய் நின் நினைவுகளால்...
அலைக்கழிக்கப்படுகிறேன்... 
அமுதே! எனதழகிய விஷமே..!

No comments: