Tuesday, December 28, 2010
உனக்காக மட்டும்....
Sunday, July 11, 2010
என் வரலாறு..!
Wednesday, June 30, 2010
சடலம் எச்சம்..!
Sunday, June 20, 2010
தருணம் எதுவாயினும்...
Saturday, June 19, 2010
நினைவுகளால் அலைக்கழிக்கப்படுகிறேன்..!
Thursday, June 17, 2010
பேசாமலேயே பேசுகிறோம்...!
Sunday, June 13, 2010
இனிஅவள் தூரமென்ற உணர்வொலி..!
இதுவரை உணரவில்லை இந்த வலியும்..!
இதுவரை கிடைக்கவில்லை எந்த சொல்லும்..!
இனியவள் தந்துவிட்ட இன்ப வலி..!
இனிஅவள் தூரமென்ற உணர்வொலி..!
அழவில்லை.. இருந்தும் ஏதோ... சின்ன பயம்..!
அளவில்லை.. கொஞ்சம் நானும்... உந்தன் வயம்..!
தொடரட்டும்.. இதன் எல்லை வரை..
துடிக்கட்டும்.. இதயம் அது வரை......மிதமாய்..!
புரியாது புன்னகைக்கிறோம்..!
உதற முயன்றேன் பலமுறை..! அழுது
அருகே நெருங்கினாள் இதுவரை..!
கட்டுக்கள் உடைக்குமோ நம்சிநேகம்?! - என
சட்டென விலக யத்தனிக்கிறோம்..!!
தெளிவு பிறந்ததென்று மகிழ்வதோ?!
பிரிவு வருதென்று அழுவதோ?!
புரியாது புன்னகைக்கிறோம்..! - இனி
அழுவதில்லை என்ற ஒப்பந்தத்தால்....
Saturday, May 22, 2010
வலியோடு இதயம்..!
கனல்போல் இருளில் வானம்..!
என்னோடு அழுதது மழையாய்..!
அழுதகண்ணீர் யாருமறியாமல்..
உறக்கத்திலும் உதிர்ந்துகொண்டே..
இதோ விடிந்தது...புதுப்பொழுது..!
இனிதாய் வெளிச்சம் கொணர்ந்து..!
வாழ்க்கை புரிந்தது எனக்கு..!
எழுந்து இயங்கினேன் புதுத்தெம்போடு..
என்னோடு துணைக்கு இயற்கை வந்தது..!
Wednesday, May 12, 2010
போடி..! இனி என் கண்முன் வராதே..!
Friday, April 30, 2010
நீ ஒரு வித்தியாசமான சுவாரஸ்யம்..!
நீ நிராகரித்த பொழுதுகள் - நிஜமல்லாதிருக்கட்டும் என ஒரு சிற்றாசை..!
நீ வாராத நாட்கள் - நிறமற்று கடந்ததோ என ஒரு பிரம்மை..!
நீ புன்னகைத்த பொழுதுகள் - நிரந்தரமாக நின்றிருக்க ஒரு விழைவு..!
நாம் சண்டையிட்ட கணங்கள் - சரிதையில் வரையப்பட்ட நற்சிற்பங்கள்..!
எப்படி பார்த்தாலும்... நீ ஒரு வித்தியாசமான சுவாரஸ்யம்..!
Friday, April 23, 2010
உன் ரசிகன்...!
மாயா..!
Monday, April 19, 2010
மழை நனைத்த மண்ணவள்..!
மழை நனைத்த மண்ணவள் துணைக்கு வந்தாள்..!
பெண்ணின் போதை என்னிலும் உண்டென்றாள்..!
மழைமது அருந்தி மறுமுறை பூத்தாள்..!
மலர்ந்ததின் மணமது மனமதை மயக்க..
மஞ்சள் இளவேனிற் துளிரெலாம் உடுத்தி..
பற்பல பசுமையால் என்பாழ்மனம் கெடுத்தாள்..!
இந்த நொடியும் நீளாதா என்றெனை ஏங்க வைத்தாள்..!
இந்த நொடியில் இறப்பதும் சுகமென மாயத்தாள்..!
மண்ணவள் மணமதை அழகுடன்…
கிறங்கி கைவிரித்து மீண்டும் சுகித்தேன்..!
என் "சொர்க்கம் நீயடி" என்றே..!
Friday, April 16, 2010
விதவிதமாய் ராட்டினங்கள்..!
விதவிதமாய் ராட்டினங்கள்..!
விளையாட்டாய் ஏறியமர்ந்தேன்..!
விந்தையாய் சுற்றியது..! ஏறியதா? இறங்கியதா?
சுழன்றதா? நின்றதா? சுழலுக்குள் எதிர்சுழல் செய்ததா?
ஏதும் புரியாதிருந்தது..!
பயந்தேனா? பற்கள் கடுமையாய் கடிபட்டனவா?
மகிழ்ந்தேனா? மனம் கொஞ்சம் சிறகடித்ததா?
இறந்தனா? இதயம் அடிக்கடி திடுக்கிட்டதா? - எனை
இழந்தனா? இமைகள் அனிச்சையாய் மூடியதா?
விளங்கி தெளிவதற்க்குள் விருட்டென நின்றது..!
மழலையானதில் மகிழ்ந்து இறங்கினேன்..! - மீண்டும்
ஏறுவனோ என்பதும் எட்டவில்லை என் சிற்றறிவிற்கு..!
Thursday, April 08, 2010
அவள் வயப்பட்ட மழலையாய் நான்..!
Wednesday, January 06, 2010
அழாமல் அழுகிறேன்..!
"விழாமல் விழுந்தேன்..!
எழாமல் எழுந்தேன்..!
அழாமல் அழுகிறேன்..!"
என்மொழி அறிந்தவருக்கு இதன் பொருள் புரியாது..!
இதன் பொருள் அறிந்தவளுக்கு என்மொழி தெரியாது!
அட! சுவாரஸ்யமாய்த் தான் நகர்கிறது...
இந்த அயல் தேசத்து வாழ்க்கையும்..!!