Wednesday, June 30, 2010

சடலம் எச்சம்..!

சுடச்சுட சொல்லெறிந்த உன்னை 
சாடவும் தெரிந்தறியா தென்மனம் 
சாகவும் துணிந்ததடி..! - சடலம் எச்சம்..!

Sunday, June 20, 2010

தருணம் எதுவாயினும்...

தருணம் எதுவாயினும்... மகிழ மட்டும் அறிந்திருந்தேன்..!
நீ வந்து போனாய்..! ஏதேதோ தந்துவிட்டு போனாய்..!
இப்போதெல்லாம்...
மகிழுந்தருணங்களில் வருந்துகிறேன்...!
"நீயருகில் இல்லையே" என்று...
"நீயருகில் இல்லையே" என்று...
வருந்துந் தருணங்களில் மகிழவும் செய்கிறேன்..!
என்ன மாயம் செய்தாயடி?!

Saturday, June 19, 2010

நினைவுகளால் அலைக்கழிக்கப்படுகிறேன்..!

நினைவுகளால் அலைக்கழிக்கப்படுகிறேன்..!
நீ செய்த குறும்புகள்..! நீ பார்த்த பார்வைகள்..!
நின் சொற்கள் - அவை தொனித்த தொனிகள்..!
கலங்கிய நெஞ்சம்... ததும்பிய கண்ணீர்..!
சில நேரம் தழுதழுத்த குரல்..
பலவிதமாய் நீ உடுத்திய உடைகள்..
பரபரப்பாய் நாம் கடத்திய பொழுதுகள்..
அத்தனையும் ஒருசேர அழகழகாய்..
சிந்தையெல்லாம் ஆக்கிரமித்த நீ..!
சிரிக்கிறேன்.. அழுகிறேன்.. சிந்திக்கிறேன்
நிச்சயமாய் நின் நினைவுகளால்...
அலைக்கழிக்கப்படுகிறேன்... 
அமுதே! எனதழகிய விஷமே..!

Thursday, June 17, 2010

பேசாமலேயே பேசுகிறோம்...!

"இனி நாம் பேச வேண்டாம்" என்றாள்..!
"சரி" என்றேன்..! "காரணம்?!"
"காதலால்... ஆதலால்...!!" என்றாள்..!
"கட்டளைகள் மறுப்பனோ?!" என்றேன்..!
புரிந்து புன்னகைத்தோம் இருவரும் ....
இப்பொழுதெல்லாம்.....
"பேசாமலேயே பேசுகிறோம்...!"

Sunday, June 13, 2010

இனிஅவள் தூரமென்ற உணர்வொலி..!

இதுவரை உணரவில்லை இந்த வலியும்..! 

இதுவரை கிடைக்கவில்லை எந்த சொல்லும்..!

இனியவள் தந்துவிட்ட இன்ப வலி..!

இனிஅவள்  தூரமென்ற உணர்வொலி..!

அழவில்லை.. இருந்தும் ஏதோ... சின்ன பயம்..!

அளவில்லை.. கொஞ்சம் நானும்... உந்தன் வயம்..!

தொடரட்டும்.. இதன் எல்லை வரை..

துடிக்கட்டும்.. இதயம் அது வரை......மிதமாய்..!

புரியாது புன்னகைக்கிறோம்..!

உதற முயன்றேன் பலமுறை..! அழுது 

அருகே நெருங்கினாள் இதுவரை..!

கட்டுக்கள் உடைக்குமோ நம்சிநேகம்?! - என 

சட்டென விலக யத்தனிக்கிறோம்..!!

தெளிவு பிறந்ததென்று மகிழ்வதோ?!

பிரிவு வருதென்று அழுவதோ?!

புரியாது புன்னகைக்கிறோம்..! - இனி 

அழுவதில்லை என்ற ஒப்பந்தத்தால்....