சாடவும் தெரிந்தறியா தென்மனம்
சாகவும் துணிந்ததடி..! - சடலம் எச்சம்..!
என் உணர்வுகளை தூண்டிய தூண்டல் அத்தனைக்கும் இங்கே ஒரு சிறு இடம் அமைக்க விழைகிறேன்.
இதுவரை உணரவில்லை இந்த வலியும்..!
இதுவரை கிடைக்கவில்லை எந்த சொல்லும்..!
இனியவள் தந்துவிட்ட இன்ப வலி..!
இனிஅவள் தூரமென்ற உணர்வொலி..!
அழவில்லை.. இருந்தும் ஏதோ... சின்ன பயம்..!
அளவில்லை.. கொஞ்சம் நானும்... உந்தன் வயம்..!
தொடரட்டும்.. இதன் எல்லை வரை..
துடிக்கட்டும்.. இதயம் அது வரை......மிதமாய்..!
உதற முயன்றேன் பலமுறை..! அழுது
அருகே நெருங்கினாள் இதுவரை..!
கட்டுக்கள் உடைக்குமோ நம்சிநேகம்?! - என
சட்டென விலக யத்தனிக்கிறோம்..!!
தெளிவு பிறந்ததென்று மகிழ்வதோ?!
பிரிவு வருதென்று அழுவதோ?!
புரியாது புன்னகைக்கிறோம்..! - இனி
அழுவதில்லை என்ற ஒப்பந்தத்தால்....