Tuesday, December 22, 2009

குருட்டு யாசகன்..!

இளங்காலை...இரைச்சலோடு சாலை..!

இதமாய் பாடிக்கொண்டேயொரு குருட்டு யாசகன்..!

யாருமில்லாத சாலையில் கர்ணர்களுக்காக துதித்தான்..!

யாருமேயில்லையே என வருந்திக்கொண்டே நானும்

கடந்தேன்..அவசரமாய் அலுவலகத்திற்கு...

யாரையும் குறை சொல்லத் தேவையில்லை..!!

இயற்கையின் நியதிக்குள்ளே தான்

இத்தனையும் நடந்துகொண்டிருக்கிறது..!! இத்தனையும்..!!