இளங்காலை...இரைச்சலோடு சாலை..!
இதமாய் பாடிக்கொண்டேயொரு குருட்டு யாசகன்..!
யாருமில்லாத சாலையில் கர்ணர்களுக்காக துதித்தான்..!
யாருமேயில்லையே என வருந்திக்கொண்டே நானும்
கடந்தேன்..அவசரமாய் அலுவலகத்திற்கு...
யாரையும் குறை சொல்லத் தேவையில்லை..!!
இயற்கையின் நியதிக்குள்ளே தான்
இத்தனையும் நடந்துகொண்டிருக்கிறது..!! இத்தனையும்..!!