Friday, February 18, 2011

நீ சொல்லாததை...

நீ சொல்லாததையும்...
சொல்லியதாய் எண்ணி...
எதற்கும் ஏங்காதவன்போல்..
வாழ்வதும் சுகமடி..!

Monday, February 14, 2011

பூமியை புரியவைப்பதில்..

பூமியை புரியவைப்பதில்... பெண்மைக்கே பெரும்பங்கு..!
தாயாய்.. தனித்துவமாய்.. எனை வளர்த்தவள் பெண்..!
தோழியாய்.. சகோதரியாய்.. துணையிருந்தவள் பெண்..!
காதலால் என்கப்பல்கள் கவிழ்த்தவர்கள் பெண்கள்.!
கடைசியாய் எனை கரைசேர்த்தவள் ஒரு பெண்..!
கவிதையாய்.. எனையும் தாயாக்கிய மக்களும் - என் 
இரண்டாம் மழலையில் விளையாடிய பேத்திகளும்..!
கடவுளாய் எனை மாற்றிய சந்ததிக்கும்.. வித்தாய் பெண்..!
இங்கே...
ஆண்களை மறந்தது இதன் பொருட்பிழையில்லை..!
நன்றாய் கவனியுங்கள்.. 
பெண்மையில் ஆணும் அடங்கலாம்..!