தென்றலாய் வந்தும் - எனைப்
புயலாய் புலம் பெயர்த்தெடுத்தாய்..!!
புலனெலாம் நெகிழ - நீ
எனைப் புதிதாய் பெற்றெடுத்தத் தாய்..!!
உயிர்க்கவிதையாய் நீ இருப்பதாலோ என்னவோ?
கவிதைகளிலிருந்து தூரமாய் நான்..!
என் உணர்வுகளை தூண்டிய தூண்டல் அத்தனைக்கும் இங்கே ஒரு சிறு இடம் அமைக்க விழைகிறேன்.