Thursday, April 07, 2011

காதல் மரக் காடுகள்..!

காதல் விதை விதைத்தாய் என் நெஞ்சில்..

விளையாட்டாய் நீர் வார்த்தாய்..! நானும் தான்..!

ஊடலால் வெயிலும் தந்தாய்..! நானும் தான்.!

துளிர்த்து மளமளவென மரமானது..! நம் காதல்..!

 

உன் ஒவ்வொரு புன்னகைக்கும்..

பூத்துக் காய்த்து.. புது விதை வீழ்ந்தது...!

சட்டென விடை கேட்டாய்....!

விட்ட கண்ணீரில் விதையெலாம் துளிர்த்தங்கே..!

 

அன்றொரு நாள் வந்தாய்..! 

ஒரு விதை எடுத்துக்கொண்டாய்..!

ஒன்றுமில்லை உனக்கும் எனக்குமென்றாய்..!

நீ எடுத்தது ஒரு விதை! எஞ்சியதை என்ன செய்ய?


பிஞ்சுச்செடியல்ல பிடுங்கி எறிய

தனியொரு மரமல்ல வேரோடு வீழ்த்த..

அடர்ந்த காடடி இது..! என் இதயத்தில் 

அழகிநீ விதைத்த காதல் மரக்காடுகள்..!

 

காயாத உன் நினைவின் சாரலில்..

அடுத்த தலைமுறை விதைகளும் வீழுதங்கே..!

கொஞ்சம் அனல் வீசிப்போடி..!

எந்தன் நெஞ்சும் எரிந்து சாகட்டும்.. தீயில்..!