Monday, December 05, 2011

அலைமகளே..!

அணைத்துப் போகிறாயா? - அழகேயெனை

அறைந்துப் போகிறாயா? - இல்லை

அழுதுப் போகிறாயா? - நெஞ்சில்

எழுதிப் போகிறாயா? - என்காதில்

சொல்லிப் போகிறாயா?

அலைமகளே..! அலைமகளே..!

உனை அணைத்துக் கிடக்கிறேன்..! - நீ

அணைக்கக் காத்துக்கிடக்கிறேன்..! - உன்

கண்ணீர் துடைக்கக் கரையாய் இருக்கிறேன்..!

உன்தூரிகை கிறுக்கத் தரையாய் விரிகிறேன்..!

உன்காதல் கேட்டுக் கடல்மணலாய் உறைகிறேன்..!

நேரம் மறந்து.. நீண்டு கிடக்கிறேன்..! - உன்னால்

ஈரம் சுரந்து.. இதயம் கணக்கிறேன்.!


பாலையாய் மாற.. வேண்டாம் எனக்கு..! உன்

பார்வையின் ஈரம்.. போதும் எனக்கு..! நீ

நெருங்கினும்.. நீங்கினும்.. உன் அருகிலே

அருங்கிலே.. என்ஆயுளும் கழியட்டும்..!