Monday, April 19, 2010

மழை நனைத்த மண்ணவள்..!

மனங்குழைய தனிமையில் பயணித்தவென்னோடு 
மழை நனைத்த மண்ணவள் துணைக்கு வந்தாள்..! 
பெண்ணின் போதை என்னிலும் உண்டென்றாள்..! 
மழைமது அருந்தி மறுமுறை பூத்தாள்..! 
மலர்ந்ததின் மணமது மனமதை மயக்க.. 
மஞ்சள் இளவேனிற் துளிரெலாம் உடுத்தி.. 
பற்பல பசுமையால் என்பாழ்மனம் கெடுத்தாள்..! 
இந்த நொடியும் நீளாதா என்றெனை ஏங்க வைத்தாள்..! 
இந்த நொடியில் இறப்பதும் சுகமென மாயத்தாள்..! 
மண்ணவள் மணமதை அழகுடன்… 
கிறங்கி கைவிரித்து மீண்டும் சுகித்தேன்..! 
என் "சொர்க்கம் நீயடி" என்றே..!

No comments: