Friday, April 16, 2010

விதவிதமாய் ராட்டினங்கள்..!

விதவிதமாய் ராட்டினங்கள்..!

விளையாட்டாய் ஏறியமர்ந்தேன்..!

விந்தையாய் சுற்றியது..! ஏறியதா? இறங்கியதா?

சுழன்றதா? நின்றதா? சுழலுக்குள் எதிர்சுழல் செய்ததா?

ஏதும் புரியாதிருந்தது..! 

பயந்தேனா? பற்கள் கடுமையாய் கடிபட்டனவா?

மகிழ்ந்தேனா? மனம் கொஞ்சம் சிறகடித்ததா?

இறந்தனா? இதயம் அடிக்கடி திடுக்கிட்டதா? - எனை 

இழந்தனா?  இமைகள் அனிச்சையாய் மூடியதா?

விளங்கி தெளிவதற்க்குள் விருட்டென நின்றது..!

மழலையானதில் மகிழ்ந்து இறங்கினேன்..! - மீண்டும் 

ஏறுவனோ என்பதும் எட்டவில்லை என் சிற்றறிவிற்கு..!

No comments: