நட்ட நடு நிசி.
வெட்ட வெளிதனில் கட்டுமரம்.
நினைவுகளை நிலவொளியில் உலர்த்திக் கொண்டிருந்தேன்.
என் நரம்பு நாளங்களில் நின் அம்சங்கள் அழியாமல்,
நீ தொட்ட கடைசி எச்சிலும் காய்ந்து போனதே..!!
ஒரு பகல் ஒரு யுகமாய்.. நகர,
இரவு வந்தது மீனவ கும்பலோடு.
சில நாழிகைகள்.. மீண்டும் உனைப்புணர வாய்ப்பு..!
மீன்களை தழுவிக்கொண்டு உனைப்பிரிந்தேன்.
மீண்டும் உனைச்சேர்வேன் என்ற எதிர்பார்ப்பில்....!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment