விதவிதமாய் ராட்டினங்கள்..!
விளையாட்டாய் ஏறியமர்ந்தேன்..!
விந்தையாய் சுற்றியது..! ஏறியதா? இறங்கியதா?
சுழன்றதா? நின்றதா? சுழலுக்குள் எதிர்சுழல் செய்ததா?
ஏதும் புரியாதிருந்தது..!
பயந்தேனா? பற்கள் கடுமையாய் கடிபட்டனவா?
மகிழ்ந்தேனா? மனம் கொஞ்சம் சிறகடித்ததா?
இறந்தனா? இதயம் அடிக்கடி திடுக்கிட்டதா? - எனை
இழந்தனா? இமைகள் அனிச்சையாய் மூடியதா?
விளங்கி தெளிவதற்க்குள் விருட்டென நின்றது..!
மழலையானதில் மகிழ்ந்து இறங்கினேன்..! - மீண்டும்
ஏறுவனோ என்பதும் எட்டவில்லை என் சிற்றறிவிற்கு..!
No comments:
Post a Comment