Wednesday, October 07, 2009

தாரையால் நனைகிறேன்..!



மழைபெய்து ஓய்ந்திருந்தது..!

அவளுக்காக காத்திருந்தேன்..!

குளித்த ஈரத்தோடு வந்தாள் - அந்த

வாசத்தில் வசமிழந்தேன்..!

சட்டென அருகே வந்து

வேகமாய் தலையசைத்து

கேசத்து நீர்த்திவளைகளால்

பூமிக்குக் கொணர்ந்தாள்..!

மழைமெழுகிய சாலைகள்..!

கைகோர்த்து நடந்தோம்..!

சட்டென தேங்கினாள்..! - நான்

எதார்த்தமாய் நடந்தேன்..!

வேகமாய் பின்னிருந்து வந்து - அந்த

வேய்களின் கிளையசைத்து ஓடினாள்..!

தாரையால் நனைகிறேன்..! - தாமதமாய்

வந்திறங்கிய தாரையால் நனைகிறேன்..!

இன்னுமொருமுறை அவள் ஈரதேகம்

தேகத்து வாசத்தோடுகேசத்து

நீரெலாம் நினைவுக்கு வந்தகன்றது..!

கோபித்து..புன்னகைத்து..கட்டியணைத்து..

கொஞ்சம் அவளையும் நனைத்தேன் - காதலால்..!