Thursday, April 08, 2010

அவள் வயப்பட்ட மழலையாய் நான்..!

கடகடவென சிறகடித்தாள்..!
துள்ளித் தாவினாள் இங்குமங்கும்..!
வெள்ளை உடுத்தவில்லை இவள் தேவதையுமில்லை..!
வெறித்துப் பார்க்கவில்லை இவள் வேங்கையுமில்லை..!
மெல்ல நெருங்கினேன்.. மேனிசிலிர்த்து நகர்ந்தாள்..!
மீண்டும் நெருங்குவனோ என்ற மிரட்சியில் அவள்..!
இத்தனை பீடிகைக்கு மயங்க வேண்டாம்..!
எனை விட்டுச் சிறகடித்துப் பறந்த
அழகு "சிட்டுக்குருவி" தான் அவள்..!
துரத்தித் தோற்றுக் கொண்டிருக்கிறேன்..!
அறியாமல் அவள் வயப்பட்ட மழலையாய் நான்..!

1 comment:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in