அணைத்துப் போகிறாயா? - அழகேயெனை
அறைந்துப் போகிறாயா? - இல்லை
அழுதுப் போகிறாயா? - நெஞ்சில்
எழுதிப் போகிறாயா? - என்காதில்
சொல்லிப் போகிறாயா?
அலைமகளே..! அலைமகளே..!
உனை அணைத்துக் கிடக்கிறேன்..! - நீ
அணைக்கக் காத்துக்கிடக்கிறேன்..! - உன்
கண்ணீர் துடைக்கக் கரையாய் இருக்கிறேன்..!
உன்தூரிகை கிறுக்கத் தரையாய் விரிகிறேன்..!
உன்காதல் கேட்டுக் கடல்மணலாய் உறைகிறேன்..!
நேரம் மறந்து.. நீண்டு கிடக்கிறேன்..! - உன்னால்
ஈரம் சுரந்து.. இதயம் கணக்கிறேன்.!
பாலையாய் மாற.. வேண்டாம் எனக்கு..! உன்
பார்வையின் ஈரம்.. போதும் எனக்கு..! நீ
நெருங்கினும்.. நீங்கினும்.. உன் அருகிலே
அருங்கிலே.. என்ஆயுளும் கழியட்டும்..!
No comments:
Post a Comment