தாயாய்.. தனித்துவமாய்.. எனை வளர்த்தவள் பெண்..!
தோழியாய்.. சகோதரியாய்.. துணையிருந்தவள் பெண்..!
காதலால் என்கப்பல்கள் கவிழ்த்தவர்கள் பெண்கள்.!
கடைசியாய் எனை கரைசேர்த்தவள் ஒரு பெண்..!
கவிதையாய்.. எனையும் தாயாக்கிய மக்களும் - என்
இரண்டாம் மழலையில் விளையாடிய பேத்திகளும்..!
கடவுளாய் எனை மாற்றிய சந்ததிக்கும்.. வித்தாய் பெண்..!
இங்கே...
ஆண்களை மறந்தது இதன் பொருட்பிழையில்லை..!
நன்றாய் கவனியுங்கள்..
பெண்மையில் ஆணும் அடங்கலாம்..!
No comments:
Post a Comment